Saturday, September 25, 2010

காமினி - மயில்ராவணன்

ச்ளக்
எனஃப் எனஃப்
என்ன பரந்தாமன் ராவா குடிக்கிறீங்க, இன்னும் ரெண்டு ஐஸ் க்யூப் போட்டுக்குங்க.
நோ நோ போதும். 15 வயசிலேர்ந்து ராவாதான் குடிக்கிறேன் வைரம் பாஞ்ச கட்ட இது தெரியிதா? ஹா ஹா என்ற சிரிப்பில் கையிலிருந்த் கோப்பையில் இன்னும் கொஞ்சம் உற்சாக திரவத்தை ஊற்றிக் கொண்டார்.

போதும் பரந்தாமா யூனிவர்சிட்டில, டாக்டர் பட்டம் வாங்கி இளையதலைமுறைக்கு நல்லது சொல்லிட்டு..இப்ப என்னடான்னா ஹாட்ட ராவா அடிச்சி ரவுசு பண்ற. உன் பொன்னு காமினிக்குத் தெரிஞ்சா என்னத்தான் கோவிச்சிக்குவா.

ஏன்யா குடிக்கற நேரத்துல வீட்ட ஞாபகப் படுத்தற. சரி. சரி மிச்சத்த கார்லயே வெச்சிக்கறேன் என்று எழுந்த பரந்தாமன். ட்ரைவருக்கு /போன் போடு இன்னிக்கு பெரிய வீட்டுக்குப் போகவேண்டாம் ஃபார்ம் அவுஸ் போனும்னு சொல்லு.  
************************************************************************************************************************************************************
என்னடி இது?

திருஷ்டி சுத்திப் போடனும்க மொத மொத டாக்டராயிருக்கீங்க. இனிமே டாக்டர்னுதான் உங்கள கூப்பிடனும்னு வீட்ல எல்லாருக்கும் ஆர்டரே போட்டுட்டேன்.

ஆர்டி இவ? விட்டா வரிசையா எல்லாரையும் நிக்க வை. ஊசி போட்டு, மாத்தர கொடுக்கறேன். ஆனாலும் இந்த டீல் நல்லாதான் இருக்கு. கெக் கெக் என்ற சிரிப்பு காமினி ரூம் வரைக்கும் கேட்டது. சகிக்காமல் காதைப் பொத்திக் கொண்டாள்.
எங்க காமினி. என்ற பரந்தாமன் காமினி ரூமுக்குள் நுழைந்தார். என்னம்மா ஆச்சு என் பொண்ணுக்கு
ஃபேஸ் மாஸ்க்குங்க. அப்பத்தான் முகம் பள பளன்னு இருக்கும்.

ஏண்டி இதெல்லாம் உன் வேலையா? இந்தக் கிரீமெல்லாம் தோல்ல எதுனா அலர்ஜி கொண்டுவரப்போகுது. இதென்ன சீக்கு பிடிச்சவன் மாதிரி ஒயர் எல்லாம் மாட்டி வெச்சிருக்க?

அட க்ரீமெல்லாம் இல்லீங்க இது துணிமாதிரி முகத்துல போட்டுகிட்டா போதும். பாட்டரி போட்டு இந்த ஒயர் வழியா ஏதோ லைட் மூஞ்சில அடிச்சா, கரும்புள்ளி எல்லாம் வராதாம்.

யார் சொன்னா?

டிவில அதுவும் ஒரு வெள்ளக்காரம்மா தமிழ்லயே பேசுதுங்க என்ற பெரிய நாயகியை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட டாக்டர் பரந்தாமன். இவ உண்மையிலேயே மண்டைல மசாலா இல்லாதவளா? இல்ல நடிக்கறாளா என்ற யோசனையுடன் காமினியின் அறையை விட்டு வெளியேறினார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

மெதுவாய் காரேஜுக்கு சென்று ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஈசிஆர் ரோடில் முட்டுக்காடு நோக்கி விரட்டினாள்.

************************************************************************************************************************************************************
சாரி சிவா என்ற காமினியை அடுத்த வார்த்தை பேச விடாது முத்தமிட்டான் சிவா. எங்க உன்னை பார்க்காமலேயே போய்டுவேனோன்னு நினெச்சேன் என்ற சிவாவின் வாயை மூடி

ச்சு என்ன இது அபசகுனமா? என்ற காமினியை கண்களில் கலக்கத்தோடு பார்த்தான் சிவா. இல்ல காமினி இந்தவாட்டி சியாச்சின். நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. போய் திரும்ப நாளாகும். அது மோசமான ஆபத்து நிறைஞ்ச இடம். உயிர் போவது கவலையில்ல ஆனா நீதான் என் கண்ல வர்ற கண்ணீருக்குக் காரணம்.

ச்ஸ்ஸ் ஏன் நெகட்டிவ்வா பேசனும். நீ ஒரு மிலிட்டரி மேன். நீ திரும்ப வருவ. அதுக்கு நீ இப்ப ஒரு விஷயம் பண்னனும்.

என்ன இந்த ப்ரிட்ஜ்லேர்ந்து குதிக்கனுமா?

நோ கல்யாணம் பண்ணு இப்பவே இங்கயே.

ஆர் யூ க்ரேஸி.

நோ சிவா டாம் சீரியஸ். எது என்னை விட உன்னோட நெருக்கமா இருக்கமோ அது சாட்சியா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம். டூ இட் மேன்.

அப்ப என் துப்பாக்கிய சாட்சியா வெச்சித்தான் பண்ணிக்கனும். பட் காமினி..

வாவ் நைஸ் ஐடியா. துப்பாக்கி எங்க அது எடு, இப்படி நிக்க வை.

ஹும்ம் இப்ப உன் செயின எனக்குப் போடு. மெதுவாய் சிவா கீ கொடுத்த பொம்மையைப் போல காமினி கூறுவதை ஒவ்வொன்றாய் செய்து கொண்டிருந்தான்,

க்ரேட் நான் இப்ப மிஸர்ஸ் சிவா. தி கமாண்டோ.

நோ ஒன்னு பாக்கி இருக்கு

 "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

ஓஹ் கமாண்டொ பயிற்சியில துப்பாக்கில பொட்டு வெக்கறதெல்லாம் சொல்லித்தர்றாங்களா?

ஏய் நாட்டி. என்றவனைப் பார்த்து நோ யாம் யுவர் பொண்டாட்டி என்றாள் காமினி. போதும். கிளம்பு சிவா நேரமாகுது.

அடிப்பாவி ஃபர்ஸ்ட் நைட் இல்லையா?

உண்டு பத்திரமா திரும்பி வந்ததுக்கபுறம்.

முத்தம் ஒன்றைப் பறக்க விட்டு வேகமாய் ஸ்கூட்டியில் செல்லும் காமினியை கனவா நினைவா என்று பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

************************************************************************************************************************************************************

சப்த்தமில்லாது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வெளிப்புற படிகள் வழியாக. தன் அறைக்கு மெல்ல நடக்கும் போது டாக்டரின் ச்சே அப்பாவின் குரல் கேட்டது.

இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறார்.

எக்ஸலண்ட் பீதாம்பரம். கோவில்லேர்ந்து சிலை கடத்தறதுக்கு இது சிம்பிள் ரிஸ்க் இல்லாம பணம் பார்த்துடலாம். ஆமா இந்த வைரத்துக்கு என்ன பேரு வைக்கலாம். கோட் ரொம்ப முக்கியம். நிறைய பண்ணும்போது நமக்கும் அடையாளம் இருக்கும்.

காமினின்னு வெக்கலாம் தலைவ்ரே. ஆனா..இந்த வாட்டி கொஞ்சம் பார்த்து கவனிங்க ஏகப்பட்ட போலீஸ்.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். கவனிப்புதானே செஞ்சிடலாம்.

திக் என்றது காமினிக்கு அடப்பாவிங்களா, கோவில்லயே கை வெச்சாச்சா? மெதுவாய் தன் ரூமுக்குப் போனாள். சிவாவுக்குப் போன் செய்தாள்,

சிவா

ஹே காமினி வீட்டுக்குப் போயிட்டயா?

ஆச்சு. ஒரு முக்கியமான விஷயம்.
சொல்லு..

எங்கப்பா.....

டாக்டர்.பரந்தாமனக்கு ஆப்பு ரெடியாகிக் கொண்டிருந்தது
************************************************************************************************************************************************************

Tuesday, September 21, 2010

எனக்கு சாருவை பிடிக்காது…

                                          - கோகுல்
ஆம். எனக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காது. இன்றைக்கு நேற்றல்ல கடந்த 7 வருடங்களாக பிடிக்காது. ஆனாலும், என்ன செய்வது, இந்த எழுத்து சாத்தானை படிக்க நேர்ந்து 7 வருடங்கள் ஆகி விட்டதே! நானும் இன்றே இப்படம் கடைசி என்பதை போல இனி இவர் எழுத்தை படிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டு வேறு ஏதேதோ வேலைகளில் மூழ்கி விடுவேன். ஆனால் மூன்றாவது நாள் டாஸ்மாக்கை கடக்கும் குடிகாரனின் கை நடுங்குவதை போல எனது கை தானாக சாருஆன்லை வெப்சைட்டை ஓபன் செய்யும். தீபாவளி ரிலீஸுக்கு தலைவர் படம் பார்க்கும் ரசிகனைபோல மூன்று நாட்கள் அவர் எழுதிய அனைத்தையும் மூன்று மனி நேரம் படிப்பேன்.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்காது. ஏனென்றால் அவர் குடிப்பார். பெண்களைப் பற்றி பேசுவார். ஆம், நான் உத்தமன் தான். எனக்கு சினிமாவில் அரை நிர்வாணத்தில் வரும் பெண்களையும், குடித்து விட்டு பாட்டு பாடும் ஹீரோக்களையும் மட்டுமே ரசிக்க முடியும். எழுத்தாளர்களெல்லாம் குடிக்க கூடாது. அவர்கள் சமூக சீர்திருத்த வாதிகள். குடியையும் பெண்ணையும் பற்றி வர்ணிப்பதால் மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட்டை எனது மனமும் முன் வைக்கும். ஆனாலும், நன்பரிடமிருந்துதயாரா இரு, இன்னும் ஒரு மணி நேரத்தில கிண்டி வழியா நானும் சாருவும் வருவோம். அப்படியே .சி.ஆர் போகலாம்என்ற குரல் செல்ஃபோன் வழியாக வரும் வரைதான். அதற்குப்பிறகு இந்த யோக்கிய சிகாமணி , ”சாரு வேற செம காஸ்டியூம்ல வருவாரே, நாம இந்த புளூ ஜீன்ஸ் போடலாமா இல்ல அந்த கார்கோஸ் போட்டிட்டு போகலாமாஎன்ற ரேஞ்சில் தான் இருக்கும். அது குடிப்பதற்கான ஆர்வமோ அல்லது ஒரு பிரபலத்தை சந்திக்கப் போகும் ஆர்வமோ அல்ல. வேறொன்று….
                                
ஆனாலும் இன்னும் எனக்கு சாருவை பிடிக்காது. அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். எழுதும் அனைவருக்கும் பேசும் கலை அவ்வளவு எளிதில் வசப்படும். அவர்கள் பேச ஆரம்பித்தால் ஒன்று தூக்கம் வரும் , இல்லையேல் மூத்திரம் போக தோன்றும். ஆனால் இந்த சாத்தான் பேச ஆரம்பித்தால், வெறும் லெமன் மட்டும் அருந்தும் எனக்கே டேபிளில் உள்ளவற்றில் என்னுடைய லெமன் கோப்பை எங்கே என்னும் அளவிற்கு குழப்பம் வரும். அது காற்றில் கலந்திருக்கும் ஒயின் வாசனையால் மட்டுமல்ல பேச்சில் கலந்து வரும் போதையால்.
                             
என் மனசாட்சிக்கு இன்னும் சாருவைப் பிடிக்காது. எழுத்தை திறந்தாலே கெட்ட வார்த்தைகள். என்ன செய்வது ஒரு கெட்ட வார்த்தை கூட பேசாத எனக்கு சிக்னலில் காரை இடித்த படி வந்து நிற்கும் பைக் காரனையும், டிரெயினில் உரசிக் கொண்டு நிற்பவனையும் மட்டுமே, மனதுக்குள் ஆயிரம் கெட்ட வார்த்தைகளால் திட்ட தெரியும். அது நாம் நமக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு. வெளியில் மட்டுமாவது நல்லவனாக காட்டிக் கொள்ள விழையும் மனதின் வெளிப்பாடு. அதனால்தான் எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் எழுத்தெல்லாம் குப்பை. ராசலீலா ஒரு குப்பை. 655 பக்கங்களில் ஒரு நாவலாம். இதையெல்லாம் எவன் படிப்பான் என்றுதான் திட்டுவேன். ஆனாலும் ஹைதராபாத் 10 மணி நேரம் வேறு எந்த நாவலும் உருப்படியாக துணைக்கு வருவதில்லை என்று நினைக்கும்போது முற்று புள்ளி வைக்காமல் முப்பது பக்கம் எழுதும் எழுத்தாளர்களை நினைத்தால் ஒருவேளை எனக்கு சாருவைப் பிடிக்கிறதோ?..இல்லை..
இல்லை….எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் உலக இலக்கியத்தைப் பற்றியெல்லாம் உளருகிறார். தேவையில்லாமல் பாரீஸை புகழ்கிறார். என்னவென்று யாருக்கும் சரியாக தெரியாத பின் நவீனத்துவத்தை போற்றுகிறார் என்றெல்லாம் நானும் விமர்சனம் செய்வேன். ஆனாலும் அவருடன் பேசும்போது ஒருநாள், அவர் டக்கீலாவையும், வழமை போல நான் லெமனும், அருந்தும்பொது நீட்ஷேவை பற்றி ஏதோ பேச்சு திரும்ப, அப்புறம் வழக்கம்போல அவர் டேபிளில் டக்கீலாவையும், லெமனையும் பார்த்து நம்ம சரக்கு எது என்ற குழப்பம்தான் வந்தது. எனக்குதான் சாருவைப் பிடிக்காதே. அதனால் அவரை எப்படியாவது மட்டம் தட்டம் வேண்டும் என்று லேப்டாப்பை என் பக்கம் திருப்பி அவர் பேசும்போது அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று காண பேசிக் கொண்டே அவருடைய வார்த்தைகளை இண்டர்நெட்டில் கம்பேர் செய்து கொண்டிருந்தேன். போதை அதிகமானது தான் மிச்சம். அத்தனையும் உண்மை. அதைவிட அந்த பேச்சின் சாரம், ஒரு நிமிடம் திகைக்க வைத்தது, ஏனெனில் எனக்கு முன்னால் நீட்ஷேவின் வார்த்தைகள்…….நீட்ஷே தாக்கப்படும் காட்சியை அவர் விவரித்தது, ஒரு ஓரங்க நாடகம் பார்க்கும் விளைவை ஏற்படுத்தி விட்டது. அப்போதுதான் நினைத்தேன் இது விக்கிபிடியா பார்த்து பேசும் பேச்சல்ல. நீட்ஷேவின் எழுத்து ஆட்கொண்டதால் வரும் பேச்சென்று.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்கவில்லை. நான் இண்டர்நெட்டில் அவருடைய பேச்சை கம்பேர் செய்கிறேன் என்று அறிந்து சும்மா இருக்க வேண்டியது தானே. அவருக்கு பேச சுதந்திரம் இருக்குமளவிற்கு எனக்கு அவருடைய பேச்சை சந்தேகிக்கும் அளவிற்கு சுதந்திரம் இருக்கிறது தானே. ஆனால் என்னுடய லேப்டாப்பின் இண்டர்நெட் கனெக்டிவிடியை துண்டிக்க சொல்வதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் எனக்கு சாருவை பிடிக்காது.
எனக்கு சாருவைப் பிடிக்காது, பிச்சாவரம் தீவை மதுவால் நனைத்தாரே அதனால் எனக்கு பிடிக்காது. தனது வாசகர்களுக்கு நம்மாலும் ஒரு இரவு லத்தீன் அமெரிக்க வாழ்க்கை வாழ முடியும் என்று காட்ட முடிந்ததற்காக எனக்கு சாருவைப் பிடிக்காது. முப்பது வருடமாக எழுதும் இவர் முப்பது நாட்களாக எழுதிவரும் என்னைப் போன்றவர்களின் பின்னூட்டத்திற்கெல்லாம் , தான் படித்த லத்தீன் அமெரிக்க எழுத்திலிருந்து மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதுவதாலும் அவரை எனக்கு பிடிக்காது.
இப்படி பல காரனங்களுக்காக சாருவை எனக்கு பிடிக்காது. முக்கியமாக சாருவை எனக்கு பிடிக்கும் என்று நான் சொன்னாலே என்னை நீங்கள் அனைவரும் திட்டுவீர்கள் என்பதற்காகவேஎனக்கு சாருவை பிடிக்காது”. முக்கியமாக நன்பர் மயில்ராவணனுக்கு அவரைப் பிடிக்காது என்பதாலேயே எனக்கு சாருவைப் பிடிக்காது.