tag:blogger.com,1999:blog-7635188451478868641.post6557890710116053831..comments2023-09-30T05:18:35.512-07:00Comments on மயில்ராவணன்: Eternal Loveமராhttp://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7635188451478868641.post-91646852311187661202011-03-11T10:28:37.168-08:002011-03-11T10:28:37.168-08:00அப்பா காவியம் டிராப்ட்லயாது இருக்கா இப்ப :)அப்பா காவியம் டிராப்ட்லயாது இருக்கா இப்ப :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7635188451478868641.post-27494518767409344502009-03-24T02:18:00.000-07:002009-03-24T02:18:00.000-07:00நன்று . தொடர்ச்சியாக எழுதவும்.Voipadi Kumar.ஆனால் ...நன்று . தொடர்ச்சியாக எழுதவும்.<BR/><BR/>Voipadi Kumar.<BR/><BR/>ஆனால் நண்பர் ஒருவரின் வலையில் கிடைத்த மடல் :<BR/><BR/>சற்றே எதார்த்தமுடன் எழுதப்பட்டது.<BR/><BR/>காப்பி , பேஸ்ட் மட்டுமே நான்.<BR/><BR/><BR/>Aug 11, 2008<BR/>பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்<BR/>அன்புள்ள பரிசல்காரன்!<BR/><BR/>நலம். நாடலும் அஃதே!<BR/><BR/>கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.<BR/><BR/>தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது பதிவுகளை இயன்ற அளவில் வாசித்தும் வருகிறேன்.<BR/><BR/>அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.<BR/><BR/>கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது தங்களின் சமீபத்திய பதிவு ஒன்று. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார் எனச் சொல்லியிருந்தீர்கள். 30%க்கும் அதிகமாக வலைப்பூ தொடர்பாகத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் தொழிலில் கவனச் சிதறல் ஏற்படுமென்று!<BR/><BR/>ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த வலைப் பதிவுலகு என்பதும் ஒரு வகையான போதை போன்றதே. எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.<BR/><BR/>ஆனால் நீங்கள் வலைப் பதிவு என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.<BR/><BR/>உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.<BR/><BR/>உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில் கதை கட்டுரை மற்ற எல்லா இலக்கியப் பணிகளையும் செய்யுங்கள். ஊடகங்களுக்குத் தொடர்ந்து அனுப்புங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு பாகியராஜாகக்கூட வரமுடியும். (பாக்கியராஜ் கோவை வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)<BR/><BR/>வலையுலகு ஒரு மிரேஜ். சில சினிமா ரசிகர்கள் இருப்பார்கள். ஒரு நடிகன் படம் ஹிட்டானால் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மார்க்கட் இழந்தால் புது வரவுக்குப் போஸ்டர் ஒட்டப் போய் விடுவார்கள். அதைப் போல வலையுலகிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் வலைப் பூவில் எழுத ஆரம்பித்தபோதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.<BR/><BR/>சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.<BR/><BR/>1) காலையில் எழுந்தது முதல் வலைப்பூவில் எதை எழுதுவது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?<BR/>2) எத்தனை பேர் நமது பக்கத்தைப் படித்து என்ன சொன்னார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?<BR/>3) இயற்கை உபாதைகளைக் கழிப்பது நீங்கலாக அனைத்தையும் எழுதிக் குவிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?<BR/>4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?<BR/>5) எப்போதடா கம்பியூட்டர் முன் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?<BR/>6) ஊடகங்களுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடிகிறாதா?<BR/><BR/>இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.<BR/><BR/>இரவில் நெடு நேரம் உங்களை நெட்டில் காண முடிகிறது.<BR/><BR/>(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் நெட்டில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இருக்கிறது. இங்கே வேண்டாம்.)<BR/><BR/>இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, unremunerative, time consuming, tiresome, lenghthy and tedious வலைப் பூவுக்கல்ல.<BR/><BR/>பகல் பூராவும் முதலாளியின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த வலையுலகில் நடமாடுவது நியாயமா?<BR/><BR/>எனக்குத் தெரிந்து பனியன் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாயிருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கம்பெனி துவங்கி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறார்.<BR/><BR/>இரண்டு பெண் தேவதைகளைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா? தலை சிறந்த முதல் நிலை அதிகாரிகளாக அவர்கள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்?<BR/><BR/>வெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்? அதற்காக உழையுங்கள்.<BR/><BR/>வலைப் பூக்களில் அவ்வப்போது எழுதுங்கள். அதிகமா எழுதுபவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.<BR/><BR/>வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு கம்பியூட்டர் கிடைத்து நெட் இணைப்பும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது பினாத்திக் கொண்டிருப்பவர்கள்.<BR/><BR/>எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது எழுதாவிட்டால் … (சரி வேண்டாம்.)<BR/><BR/>இன்னும் சிலர் கம்ப்யூட்டர் முன்னேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு கம்ப்யூட்டர் திரை ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது எழுதுபவர்கள்.<BR/><BR/>இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களை மற்றவர்கள் திட்ட வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.<BR/><BR/>இன்னும் சிலர் எலக்ட்ரானிக் எழுத்து வியாபாரிகள்.<BR/><BR/>இன்னும் சிலர் வீட்டில் ஹோம் பேர்டாக இருப்பார்கள். கோலம் போடுவது எப்படி கொத்து புரோட்டா போடுவது எப்படி .. இது மாதிரி.<BR/><BR/>இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எழுத்துலக அவதாரம். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! எழுத்தைவிட எழுதுபவர்களை அவதானிப்பவர்கள்.<BR/><BR/>கயல்விழி போன்றோர் மாதிரி அளவாக, செறிவாக வாரம் ஒரு முறை அல்லது இருவாரத்துக்கொரு முறை எழுதுங்கள்.<BR/><BR/>Kindly be a balanced man. Don’t get excited!<BR/><BR/>எல்லாருக்குமே தான் கவனிக்கப் படவேண்டுமென்ற உந்துதல் இருக்கும்.<BR/><BR/>குழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள்? Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.<BR/><BR/>தாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்?<BR/><BR/>ஒரு முறை தமிழய்யா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க. முத்துச்சாமியிடம் கேட்டேன்.<BR/><BR/>“ஐயா! தமிழிலும் ஆங்கிலத்திலேயும் இவ்வளவு கவர்ச்சியாய்ப் பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் எழுதக்கூடாது?”<BR/><BR/>“அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.<BR/><BR/>கடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். அன்றிலிருந்து 4 நட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.<BR/><BR/>பரிசல்காரன்! மீண்டும் சொல்கிறேன். வலைப் பதிவு போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப் பூ உலகம்!<BR/><BR/>____________________________________________<BR/>Posted by லதானந்த் at Monday, August 11, 2008 61 comments Links to this post<BR/>Labels: கடிதம்Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.com