Tuesday, June 15, 2010

ஞங் ஞங்ங் ஞ ஞா

                              -மயில்ராவணன்

பூரணி ஒரு கணம் தன்னையே மறந்து போனாள்.அந்தக் கணம் முதல் மனதில் சந்தோசம் ஆட்கொண்டுவிட்டது! ஆகவே அவள் ஒரு சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல மாறிவிட்டாள் என்று நான் சொல்லி வருகிறேன். இந்தக் கதையை நீங்கள் ரசிக்கும்படி எழுதத்துவங்கிய மயில்ராவணாகிய நான் பூரணிக்கு சிறகுகள் முறிந்து விட்டதும் பட்டாம்பூச்சியாகி விட்டாள் என்றதும் இது ஏதோ பின்நவீன மாய மந்திர எழுத்து என்று பயந்து பின்வாங்கி விடவேண்டாம்.


இது சாதா ரோஸ்ட் தான்.ஆனியன் கூட கலக்காத ரோஸ்ட்.பூரணி என்கிற பெயர் பூர்ணமாக இருப்பதால் கதாநாயகிக்கு அந்தப் பெயர். ஆனால் துரதிஸ்டவசமாகவோ, இல்லை சாதகக்குளறுபடியோ பாவம் பூரணி,கவுதம்மேனன் பட ஹீரோயின் மாதிரி இந்த சாதா ரோஸ்டின் முடிவில் பரலோகம் சென்றி விடகிறாள்.


உலகம் முழுவதும் பூரணி மாதிரியான பாவப்பட்ட பேக்குகள் இருக்கத்தான் இருக்கின்றன.கதைக்குள் வருவோம். நமது நாயகனின் பெயர் சேது.உடனே உங்களுக்கு ‘எங்கே செல்லும் இந்த பாதை? யாரோ யாரோ அறிவார்’ பாடலும் அதில் நடித்த விக்கிரமின் முகமும் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பே அல்ல.இந்தக் கதையை நான் பட்டுக்கோட்டையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் எழுதியது.அப்போது விக்ரம் என்ற நடிகரே இல்லை.


சேது ஒரு விளையாட்டு வீரன்.பூரணி சேதுவிடம் மனதை பறி கொடுத்து விட்டாள்.அவனை மைதானத்தில் கண்டதும் ஆயிரம் பூக்கள் இவள் உள்ளத்தில் மலர்ந்தன. அவனை பார்வை அம்புகளால் துளைத்தெடுப்பாள்.அழகான கண்கள்,எடுப்பான மீசை.கச்சிதமான கிராப் தலை என்று அழகின் மொத்த வடிவம் நம் சேது. பூரணி என்ன?பள்ளியில் எல்லோருமே சேது என்றால் ஜொள் வடிப்பார்கள்.


பூரணி மட்டும் என்ன அழகில் தோற்றுப் போய்விடுவாளா? கொவ்வை இதழ்கள்,பப்ளிமாஸ் கன்னம்,கிளிமூக்கு, ஒரே ஒரு சிங்கப்பல்! ஒரு பல் இருந்தால் ராசி குறைவு என்றும் இரண்டு வேண்டும் என்னைப்போல என்றும் நண்பர் ’கருந்தேள்’ராஜேஷ் கூறுகிறார். அதனால்தானோ என்னவோ நம் நாயகி ராசியில்லா நாயகி ஆகிவிட்டாளோ! என்று எனக்கே சந்தேகம் வருகிறது.


பூரணிக்கு இரவுக்காலங்களில் வரும் கனவுகளில் சேதுதான் தினமும் வந்துவிடுகிறான்.வேறு யாருமே வருவதில்லை! இவளும் தனித்தே இருக்கிறாள்.அவன் ஒரு யானையில் வந்து இறங்கினால் கூட யானை உடனே காணாமல் போய்விடுகிறது. கனவுகளில் பூரணியும்,சேதுவும் மட்டும்தான்.என்ன ஒரு குறை என்றால் எல்லாம் கருப்பு வெள்ளையில் தான்!கலர்கனவு வருவதில்லை.அந்தக் கால ஜெமினி,சாவித்திரி வெள்ளைப்பட காதல் போல!


பூரணி தன் தோழி சிந்துவிடம் தன் காதலை ஒருநாள் உடைத்தாள்.சிந்து கட்டுக்கோப்பானாவள்.வகுப்பில் முதல் மதிப்பெண் எல்லாப் பாடத்திலும் அவள்தான்! இதை தவறு என்றாள்.வீட்டில் பார்த்து உடனே கல்யாணம் செய்துகொள் என்றாள்! பூரணிக்கு கோபம்! முகத்தைக் கோணிக்காண்பித்து, ‘பருத்தி எடுக்கையிலே என்னை பலநாளும் பார்த்த மச்சான்’ பாட்டு பாடி நீ வேண்டுமானால் ஒரத்தநாடு பக்கம் நெல்வயல் வரப்பில் ஓடுடி”, என்று சிந்துவை கிண்டலடித்தாள். சிந்து பாடப்புத்தகத்தில் மூழ்கினாள்.


பூரணி தன் அடுத்தகட்ட பனிகளை ஆரம்பித்தாள்.சேதுவை கண்ணால் கண்டதும் புன்னகைவீசினாள்.அவனும் புன்னகை வீசிச் சென்றான்.பூரணி அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். அவன் அதற்கும் புன்னகை புரிந்து நழுவினான். பள்ளி ஆண்டுமலரில் கவிதை ஒன்றுடன் அவன் புகைப்படமும் வந்திருக்க ஐந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டாள். நிரந்தர ராத்திரி என்ற தலைப்பில் உருகியிருந்தான், இவளுக்கு சேது தன்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான் என்றே நினைப்பாய் இருந்தது! படித்துப் படித்து கவிதை மனப்பாடாஅகி விட்டது பூரணிக்கு!


தளிரே!உன்முகம்
மத்தளத்தில் முழங்கப்பட்ட
  இன்னிசை மழை!
அந்த மழையில் நனைந்து
உடல் நடுங்க நிற்பது நான்!
நான் ஒரு நாட்டியமேடை
அதில் சலங்கையிட்டு
நடனமாடுவதோ நீ!


வெற்றிலைக்கு சிவப்பு வர்ணமா?
உன் உதடுகள் போட்ட பிச்சை அது!
புத்தனின் மவுனத்தை புரிந்து
கொள்வதில் தாமதம் ஏன்?


தளிரே!இதை மடியிலிட்டு
தாலாட்ட சொல்லவில்லை.
மந்திரம் போலுன் மார்பில்
மறைத்து வைத்தாலே போதும்.
நான் அமர்ந்து விட்டேன்
மணமேடையில் அப்பொழுதே!


அன்பே! உன் இதயவாயிலை திறந்துவிடு!
எனக்கொரு புதிய விடியலை கொடு!


பூரணிக்கு தலைகால் புரியவில்லை! இந்தக்கவிதையை எனக்காகவே எழுதியிருக்கிறான் சேது என்றேநினைத்தாள். சேது விளையாடுவான்,புன்னகைப்பான் என்றுதான் இத்தனை நாள் இவளுக்குத் தெரியும்.சேது கவிதையும் எழுதுவான்.


உள்ளத்தில் அலைமோதும் காதலை பொறுக்கமாட்டாமல் ஒரு சுபயோக சுபதினத்தில் பூரணி சேதுவிடம் ஒரு நாள் கொட்டினாள். காதலை கேட்டாள்!’நோ’ என்றான்.மனைவியாகிறேன் என்றாள்.உலகம் ரொம்ப பெரியது. அதில் அனுபவிக்க ஏராளம் உண்டு என்றான். என்னை என்ன செய்வாய்? என்றாள்.அன்பு காட்டப்படவேண்டியவளாம்.சமூகத்தின் பலவீனமான அங்கமாம்! நான் ஒரு பறவை என்கிறான்.குடும்ப உறவுகளுக்குள் சிக்கமாட்டேன் என்றான்.


அவனிடம் பின்னர் பூரனி உறுதியாய் கூறிவிட்டாள். வாழ்வது உங்களுக்காகத்தான்...அதில் மாற்றமில்லை. வருடங்கள் பல ஆனாலும் காத்திருப்பேன்” என்று.அதுதான் கடைசியும் கூட.ஆறுமாதம் கழித்து அவன் வீட்டை விசாரித்து சென்றாள். அவன் மாமா பதுகாப்பில் இருந்தவனாம்.மாமா இறந்தபின் ஆள் சென்ற இடம் தெரியவில்லை என்கிறார்கள். வாழ்க்கைப் பயணம் விரைவாகவே ஓடியது!


கிளைமேக்ஸ்--
ஏழு ஆண்டுகள் கழித்து நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பூரணி. பூரணி இந்தக் கதையின் ஆரம்பத்தில் தன்னையே மறந்து போனதாக எழுதியிருந்தேன்.அதுதான் உண்மை. பஸ் நிறுத்தத்தில் சேதுவை பூரணி இப்போது பார்த்துவிட்டாள். இன்னமும் தன்னை ஞாபகம் வைத்திருப்பானா? சந்தேகத்தில் பார்த்தவளிடம் சேதுவே வந்தான். நலம் விசாரித்தான்.மீண்டும் இறக்கைகள் முளைத்துக் கொண்டன பூரணிக்கு.


சேது ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியில் இருக்கிறானாம். படித்த டிகிரி படிப்புக்கு அதுவே அதிகம் என்றான்.இவள் டீச்சராய் இருப்பதற்காக மகிழ்ந்தான். இருவரும் காபி குடித்தார்கள். புதிதாய் சிகரெட் குடித்தான். தவறுடா சேது இது! என்று சொல்லும் ஆசை வந்தது.

”திருமணம் ஆயிற்றா?” என்ற முக்கிய கேள்விக்கு வந்தான். நான் சொன்னது விளையாட்டுக்கு அல்ல!என்றாள். ஆனால் சேது திருமணம் செய்து கொண்டதாய் கூரினான். இவள் வீட்டுமுகவரி வாங்கிக் கொண்டான்.உங்க மனைவி அழகா? என்றாள். ‘ஆம்’ என்று கூறி விடைபெற்றான்.


தனக்கு திருமணம் நடைபெறாத செய்தியை சொல்லி அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த சேது அடுத்தநாள் அவள் முகவரிக்கு தேடி வந்தான் மனசு முழுக்க பூரணி மீது காதல் நிரப்பிக்கொண்டு! பூரணிக்கு நீங்க என்ன ஆகணும்? தகவல் இப்போதான் கிடைச்சுதா? நல்லாத் தான் இருந்தாங்க........ஆனா நேத்து நைட் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, என்றார் ஒருவர்.பாடியை ஆஸ்பிடல் கொண்டு போய்விட்டதாகவும் அவரே கூறினார்!ஞங் ஞ ஞ ஞா ஞா ஞங் ங் ஞங்!

21 comments:

Mohan said...

கதை நாயகன் பெயர் 'சேது'- இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

Paleo God said...

ட்ஸ்கி:- எல்லாரும் படிச்சிட்டு தலையில குட்டிக்குங்க...

ஞங் ஞ ஞ ஞா ஞா ஞங் ங் ஞங்!

--

கலக்கறீங்க ’மரா’ :))

geethappriyan said...

சாமி சார்,
கருந்தேள் ராஜேஷ்கு 2சிங்கப்பல் என்னும் கிசுகிசுவை வெளியிட்ட சாமிக்கு ஜே.
எனக்கு
”கடைவாய் பல்லு ஃபில்லிங்பல்லு
அடுத்தப்பல்லு சிங்கப்பல்லு”

geethappriyan said...

"ஞங் ஞங்ங் ஞ ஞா"
இதுக்கேன்ன சாமி அர்த்தம்?

geethappriyan said...

கதைக்குள்ளே ஏகம் ட்விஸ்டு வைத்துள்ளீர்?ட்ரெய்னிங் வேணும் போலருக்கே?

கருந்தேள் கண்ணாயிரம் said...

அட.. ‘மரா’ . . இது நல்லாக்கீதே . .

யோவ் - எனக்கு ரெண்டு சிங்கப்பல்லுன்ற ஒரு அண்டவெளி ரகசியத்த சம்மந்தமே இல்லாம ஒரு கதையின் நடுவுல சொல்லவேண்டிய தேவை என்ன ? ;-) மக்கா பிச்சிப்புடுவேன் . .

மத்தபடி, இந்தக்கதை நாயகன் பேரு மட்டுமில்ல, இதப் படிக்குற நாங்களும் சேது தான் ;-)

அது "ஞங் ஞங்ங் ஞ ஞா" இல்ல. . அத இப்புடி சொல்லணும்..

ஞங்கு ஞங்கு ஞா.. ஞங்கு ஞங்கு ஞா.. ஞங்குஞா ஞா ஞ ஞங்கு ஞங்கு ஞா.. தங்கிட தங்கிட தா.. அ தங்கிட தங்கிட தா... ஹ ரப்பப்பா பா ப பா பா பா !! ;-)

ஹீ ஹீ ஹீ

யாசவி said...

ஐயோ... ஐயோ....ஐயோ....

க ரா said...

ரசித்தேன்.

சாமக்கோடங்கி said...

//ஞங் ஞ ஞ ஞா ஞா ஞங் ங் ஞங்! //

இது காதல் பட பரத் மாறி செஞ்சு பாக்கறதா...? தல கலக்குறீங்க போங்க.. பாவம் அந்தப் புள்ளைய ஏங்க கொன்னு போட்டீங்க..

மரா said...

@ மோகன்
ரொம்ப நன்றி.

மரா said...

@ ஷங்கர்
’மரா’ நல்லாத்தான் இருக்கு.நன்றி

மரா said...

@ கீதப்ரியன்
இதுக்கு கருந்தேள் தான் பதில் சொல்லோனும் :)

மரா said...

@ கருந்தேள்
அப்ப தான் மக்கா நீங்கெல்லாம் வந்து படிப்பிங்க.. அது ஒரு உக்தி :)

பாலா said...

ரீடர்ல அப்டேட் ஆகியிருந்தா வந்திருப்போமில்ல?! :)

இதுக்கெல்லாம் சண்டை போடனுமா?

Romeoboy said...

வேற வழி இல்ல படிச்சிட்டு நானும் ஞங் ஞ ஞ ஞா ஞா ஞங் ங் ஞங்! சொல்ல வேண்டியது தான் ..

பாலா said...

இப்பத் தெரியுது...!! ஏன் ரீடர் வொர்க் ஆகலைன்னு!!!!!! :)

மரா said...

@ ராமசாமி கண்ணன்
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மரா said...

@ ப்ரகாஷ்
அப்பிடில்லாம் எழுதனும் தல. அப்பதான் பொய்தவம் போடலாம்.

மரா said...

@ ஹாலிவுட் பாலா
எனக்கு சண்டை போட தெரியாது. நானும் ஜெமோ போல் மகாத்மா காந்தியின் தீவிர சிஷ்யன்.

மரா said...

@ ஹாலிவுட் பாலா
ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. நன்றி.பழைய மாதிரி அயல்சினிமாக்கள் பற்றி எழுதுங்க பாஸ்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையான கதை சொல்லல், அசத்தலான திருப்பம். பூரணியை இறுதி வரிகளில் நிமிர்த்தி விட்டீர்கள்.