Thursday, June 2, 2011

ஹிட்லர்- ஒரு வரலாற்றுப் புதிர்



போர்கள் ஆபத்தானவை.
இனவெறி அணுகுண்டை விட ஆபத்தானது.

இந்த கருத்தில் நான் வெகு தெளிவானவன் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இது இந்த கட்டுரையின் நோக்கம்.

        உலகம் முழுதும் எதிர்மறையாளர்களால் நிறைந்துள்ளது. எந்த விஷயத்தையையும், அணுகும் முறையில் தெளிவில்லாமல் இருந்தால் வரலாறு முழுதும் வெறுப்பை மட்டுமே உமிழும்
.
1940 களில் ஜெர்மனி ஒரு திறமையான நிர்வாகியால் மிக மோசமாக நடத்தப்பட்டது என்பதே உண்மை. ”ஹிட்லர்ஒரு வரலாற்றுப்புதிர்என்ற புத்தகத்தை படிக்கும் வரை எனக்கும் மேற்கண்ட குழப்பமளிக்கும் கருத்தாகத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு கொடுங்கோலன் நம்மிடையே வாழ்ந்தான் என்பதையும் மறுக்க முடியாது. வேண்டுமானால் அவன் வாழ்ந்த நாடு அவன் வரலாற்றை அடியோடு புதைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். ஆனால் அவன் வாழ்க்கையை பற்றி பல்வேறு திரைப்படங்களும் நூல்களும், விவாதங்களும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.

ஹிட்லர் பற்றி தமிழில் வெகுசில நூல்களே வந்துள்ளன. அவற்றில் இராசமாணிக்கம் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் குறிப்பிடத்தகுந்தது எனலாம்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கொடுங்கோலனின் தனிப்பட்ட வாழ்வையும், அவன் அவ்வாறு அவல நிலை வாழ்வதற்கு காரணமான வரலாற்று சுவடுகளையும், இந்த நூலில் ஆசிரியர் அழகாக காட்சிபடுத்தி இருக்கிறார்.
எனது சகோதரர்கள், சகோதரிகள், மனைவியின் தாயார், என்னுடன் இணைந்து பணியாற்றிய விசுவாசமிக்க ஊழியர்கள், செயலாளர்கள், இவர்களுக்கு குறைந்தபட்ச எளிய அடிப்படை வாழ்க்கைகான வசதிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
என்று முடியும் உயில், ஒரு மிக மோசமான சர்வாதிகாரியின் நேர்மையான வார்த்தைகள் என்பதை ஏற்றுக் கொள்ள எனது சராசரி மனம் மறுக்கிறதுதான். ஆனால் அதுதான் உண்மை.

ஒரு மிகச்சிறந்த அரசியல் ஒழுக்கம் நிறைந்த போராளியாக ஹிட்லரை முன்னிறுத்துவதன் மூலம் இவர் ஹிட்லரின் அனைத்துக் கருத்துகளையும் ஆதரிப்பவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கித் தள்ளி விட முடியாது
.
யூத வெறுப்பையும் (Anti-Semite) , லட்சக்கனக்கான அப்பாவி மக்களின் சாவிற்கும் தன் எதிர்ப்பை இந்த புத்தகத்தின் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெரும்பாலான பகுதிகள் ஆழ்ந்த கருத்துகளை தற்கால அரசியலோடும், பாராளுமன்ற நடவடிக்கைகளோடும், துரோக அரசியலை, மக்கள் விரோத அரசின் போக்கை மறைமுகமாக சாடுவதாக இருப்பதாக எண்னத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தான் ஒரு சாதாரன அநாதை ஓவியனை, ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக மாற்றியது என்பதை அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூல்மிகச்சிறந்தவரலாற்று ஆவணம் என்று கூட சொல்லாம். நூலின் வடிவமைப்பு அருமை. 236 பக்கங்களில் 140 ரூபாய்க்கு ஒரு நாவலின் வேகத்துடன் படிக்க கிடைக்கும் இந்த நூல், பொதுவாக வரலாற்று நூல்களை படிக்கும்போது தோன்றும் சோர்வை நிச்சயமாக தராது.

டிஸ்கி:

      இவருடைய மற்ற நூல்கள்ஆண்மீகம் சம்பந்தப்பட்டவை என்பதை உண்மையில் நம்ப முடியவில்லைஇந்த நூல் முழுக்க ஒரு “optimistic approach” இருப்பதை உணர முடிகிறது