Tuesday, August 17, 2010

ட்விட்டர்!!! அப்படின்னா ஆப்ரேஷனா?

                                                                  வா.மு.கோமு
2010 ஆகஸ்ட் 14.சனி 1:55 PM



உயர்ந்த மனிதன் தன் ஆத்மவை மிதிக்கிறான்.பாகிஸ்தான்வாசிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.ஸ்வாமி,அம்பாள் பூத, அன்ன வாகனங்களில் திருவீதி எழுந்தருளல்


ஆணை என்றொரு திரைப்படத்தை சன் டிவியில் மதியம் ஒரு மணி செய்தி வரை காட்டினார்கள்.ஆ என்று திறந்த வாய் மூடாமல் பார்த்தேன்.அர்ஜூன் பறந்து பறந்து நிறையப் பேரை சுட்டு வீழ்த்தினார்.வாயிற்குள் மூன்று ஈக்கள் நுழைந்து பார்த்து விட்டு குகை 
மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தில் வெளியேறின.அர்ஜூன் குழந்தையை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த பிறகு படம் இனிதே நிறைவுற்றது! நான் ஜெண்டுபாம் தேடினேன்.

1:63 AM
“நீ தின்னுட்டு இருக்கிற ஊறுகாயில துளி பிதுக்கி நக்கத் தருவியா?”
“நான் ஏன் என் ஊறுகாயை உனக்கு நக்கத் தரணும்?”
“இல்ல அம்மா சொல்லியிருக்காங்க...எந்த ஒரு நல்ல காரியம் செய்யுறாதுக்கு முன்னாடி ஊறுகாய் நக்கிக்கோணும்னு”
“சரி இந்தா....நக்கிக்கோ,ஆமா இப்போ என்ன நல்ல காரியம் பண்ண யோசிச்சிருக்கே?”
“உன்னை தூக்கிட்டு ஒதுக்கமான ஒரு பகுதிக்கு போலாம்னு”
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் முன்னால் ஜனனி ஊறுகாய் நக்கிட்டு காரியத்த ஆரம்பிங்க.
1:73 PM
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை கழிவுநீரால் நிலத்தடி நீர், மற்றும் மண் பாதிப்பு.மக்கள் பரிதவிப்பு.நிலம் வைத்திருப்போர் எல்லோரும் மூங்கில் பயிர் செய்யுங்கள். மூங்கில் ஐந்து வருடங்களில் மண்ணை நச்சுத்தன்மையிலிருந்து காப்பாற்ருகிறது. இது அரிவியல் உண்மை.ஈரோடு மாவட்ட ஆட்சியர் வரப்பாளையம் மனுநீதி நாளில் அறிவிப்பு.
1:82 PM
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 575 பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.இதிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் சுமார் 50ஏக்கர் நிலத்தில் குழி தோண்டி புதைத்தும்,சிலவற்றை எரித்தும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.Deep Blue Sea.


1:90 PM
நச்சுக்கழிவுகள் குழி தோண்டி புதைக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் மனு கொடுத்தார் MLA பொன்னுத்துரை. இத்திட்டத்தினால் சென்னிமலை பகுதியில் நிலத்தடிநீர் பாதிப்படையும். சுற்றுப்புற சூழல்
 கெடும்.சுமார் 2லட்சம் மக்கள் பாதிப்படைவர்.எனவே மக்கள் நலம் கருதி திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.No Mans Land.


1:99 PM
ஈரோடு புத்தக கண்காட்சியில் புத்தகங்களை பொட்டணம் கட்டி வெளிவந்தபின் நானும் நண்பரும் கம்மங்கூல் சாப்பிட தீர்மானித்தோம்.நண்பர் மயிலுக்கு அல்சர்.மிளகாய் கடித்து கூல் சாப்பிடாமல் அன்னாசி கடித்து குடித்தார். நானோ உப்பு,மோர் கலந்த பச்சை மிளகாய் கடித்து குடித்தேன்.வவுறு புண்ணாப் போயிடுங்க என்றார்.யதேச்சையாய் ஒரு கருநாய் எங்கள் அருகே வந்தது முகம்பார்த்தது.”அப்புறம் ரெண்டு பேரும் எங்கே இந்தப் பக்கம்” என்றது!Enter the dragon.


1:103 PM
பட்டுக்கோட்டை பிரபாகரின் வல்லமை தாரோயோ,தொட்டால் தொடரும்,ஆரம்பத்தில் அப்படித்தான்,பிரியா கல்யாணாராமனின் ப்ளஸ் 1, ஜாக்கிரதை வயது 16 என்று நண்பர் பிரதீப்பிடம் வாங்கினவற்றை வரிசைப்படுத்தினேன்.தூரமாப் போய்யா என்றார்.உபரியாக
வா.மு.கோமு இலக்கியத்திற்கு குட்பை சொல்லிவிட்டார் என்று  அவர் வலைதளத்தில் எழுதுவேன் என்றார்.தேங்க்யூ தோழா! Return of the dragon.


1:110 PM
உயிர்மை ஸ்டாலில் உயிர்மை எஜமானரை தரிசிக்க முடிந்தது.அவருக்கு அலைபேசி வந்து கொண்டே இருந்தது! அலைபேசியை வாய் அருகே வைத்துப் பேசியும் பின்னர் காதுக்கும் ”எந்ந்ந்ந்தீராஆ” போல் செய்தார்.இப்படி பேசுஅவர்களில் எனக்கு தெரிந்து இவர் 937வது நபர்.


1:121 PM
உன்னதம் ஸ்டாலில் கொவ்தமசித்தார்த்தன் தன் வழக்கமான சிரிப்பலைகளோடு இருந்தார். வாங்க தோழர் என்றார்.எனக்கு உடனே ஓடிவிடலாமா என்றிருந்தது! தோழர் என்ற ஒற்றை சொல் சாகும்வரை என்னை பேய் போல் மிரட்டுகிறது(ம்)!The Entity                                                                                                                                                                -தொடரும்.....

9 comments:

Unknown said...

கலக்கல்.. அதிலும் பொருத்தமான ஆங்கிலப் பட தலைப்புக்கள்..
அப்புறம் அந்த கருப்பு நாய் வேறொன்னும் விசாரிக்கலையா?

க ரா said...

ட்விட்டர்!!! அப்படின்னா ஆப்ரேஷனா?
--
ஐயம் விளக்குக ...

செ.சரவணக்குமார் said...

அமைதியா வேல பாருங்க அப்ரசெண்டிகளா...

அந்த கருப்பு நாய் செம கலக்கல்.

பாலா said...

சார்... எனி வேகன்ஸி ஹியர்?

தேர் ஈஸ் நோ கும்மி, நோ வேர். ப்ளீஸ்!!!

geethappriyan said...

நல்லாருக்குடே மக்கா,
கருப்பு நாயி சூபர்டே,என்ன சுண்டகஞ்சியா குடுச்சீக?உமக்கு அல்சரா?

யாசவி said...

//அர்ஜூன் பறந்து பறந்து நிறையப் பேரை சுட்டு வீழ்த்தினார்.வாயிற்குள் மூன்று ஈக்கள் நுழைந்து பார்த்து விட்டு குகை
மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தில் வெளியேறின.அர்ஜூன் குழந்தையை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த பிறகு படம் இனிதே நிறைவுற்றது! நான் ஜெண்டுபாம் தேடினேன்//

யோவ் சொல்லக்கூடாதா. சட்டுன்னு சிரிச்சி காபி மேல சிந்திவிட்டது.

:)

யுவா said...

//அர்ஜூன் குழந்தையை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த பிறகு படம் இனிதே நிறைவுற்றது! நான் ஜெண்டுபாம் தேடினேன்//

ஹலோ மயில்... அதான் முழுசா பார்க்க போறீங்ல சப்ஜாடா எல்லாத்தையும் வச்சிக்றது. இந்த சண்டே கூப்றேன்.

Unknown said...

//இது அரிவியல் உண்மை.//

????

எஸ்.கே said...

படிச்சி நல்லா சிரிச்சேன் சார்!