Sunday, July 4, 2010

நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன்

                              அன்பு, பிரியம் ,சினேகம் ஆகியவற்றுடனும் அவை போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகள்.அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் லாவண்யாவின் கவிதைகள் இயங்குகின்றன.
                                                                                                                               - கலாப்ரியா


                                கற்காலம்

              இடறிய ஒவ்வொரு கல்லும்
              சொல்லிப் போகின்றது
              ஒரு நூற்றாண்டுக்கான
              தன் கதையை

              புண்ணியம் செய்தது
              ரசனயானது
              பாவம் செய்தது

              தேவதை கல்
             கன்னிக் கல்
             பூக்களால் ஆன கல்

             சொல்லித் தீராதது
             கற்களின் வாழ்க்கை

             எவற்றின் மிச்சமிது
             என்ற என் கேள்விக்கு
             அடுக்கிச் செல்கிறது
             தன் புலம்பல்களை.
-----------------------------------------------------------


                     கவிதை போலும்
 
           காலம் காலமாய் வாழும் அது
          என்றாய் நகைத்திருந்தேன்

          காவியம் போல அது
         என்றாய் புன்னகைத்திருந்தேன்

         பூவிலும் மெல்லியதது அது
         என்றாய் சிறு இதழ் விரித்திருந்தேன்

         சாவிலும் கூடவே வரும் அது
         என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்

          இறுதியில் நீ உமிழ்ந்து விட்டு போன
           எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
           கலங்கியது எனக்காக.

டிஸ்கி:

        ரொம்ப நாளாச்சு வாங்கி. நேற்று படித்தவுடன் பிடித்து போயின கவிதைகள். ’அகநாழிகை’ வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள். அருமையான வரிகள்.

17 comments:

Unknown said...

இரண்டுமே மிக அருமையான கவிதைகள்..

இனி கால் தடுக்கும் கல்லெல்லாம் ஒரு கதை சொல்லப் போகிறது ..

geethappriyan said...

அருமையான் கவிதைபகிர்வுக்கு நன்றி தோழரே!!!
உங்களுக்கு வெளிவாரித்தட்டு தயார்.அதற்கு வெளிவாறிதுட்டு எடுத்து வைக்கவும்!!!:))))

geethappriyan said...

உம் பதிவில் கும்மியிட முடியவில்லை,

geethappriyan said...

ஐயா சாமி,
ஏன் இன்னும் மாடரேஷன் வித்திருக்கிறீர்,அதுதான் கருந்தேள் சொன்னதன் பேரில் மாடரேஷனை துக்கியாச்சுல்ல?நட்புக்கு மரியாதயில்லை?அதான் கருந்தேள் இருக்காப்லல்ல?:))எடும்

கருந்தேள் கண்ணாயிரம் said...

ரைட்டு...

ராங்கு..

மீ த எத்தனையாவதோ??

நபநம . . ;-)

மயில்.. ராவணன் பார்த்தாச்சா ;-)

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றி. :-)

butterfly Surya said...

வாழ்த்துகள் லாவண்யா.

பகிர்விற்கு நன்றி

மரா said...

@ கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

மரா said...

@ கீதப்பிரியன்
துட்டு பெரிய விசயமேயில்லை..நீர் கொண்டு வாரும்.

மரா said...

மாடரேஷன் எடுக்கனுமா? இது ஆவுறதில்ல.

மரா said...

கும்மியா? அதுக்கு இன்னொரு பதிவு சொல்லிட்டு போடுறேன்.வந்து கும்முங்க.

மரா said...

@ கருந்தேள் கண்ணாயிரம்
ராவணன் பார்த்தாச்சு.மணியின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ்!!

மரா said...

@ சித்ரா
@ பட்டர்ஃப்ளை சூர்யா

நன்றி.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு மயில்.

க ரா said...

நன்றி மயில் பகிர்வுக்கு.

மரா said...

@ சரவணக்குமார்.செ
@ ராமசாமி கண்ணன்

நன்றி நண்பர்களே.

உயிரோடை said...

மிக்க நன்றி மயில்ராவணன் சார்