Tuesday, January 12, 2010

பிறவி -பொ.முத்துவேல்

நான்...
மவுனம் சுமக்கிற சவம்...!


பொறுப்பதை வேறெப்படி சொல்வது?
அவிழ்த்துவிட்ட கோயில்காளப்போல
மனசு மட்டும் அலைந்து திரிகிறது...!
கவிதையின் சூத்திரம் தேடி
ஆமாம்,
கவிதைக்கு சூத்திரமேது
சொல்லுகிற விதம்தானே
அந்த விதம் தேட
தண்ணி தெளித்து விட்டாயிற்று!
எப்பொழுதோ
நான்
மவுனம் சுமக்கிற சவம்...!
அரும்பு மீசைப்பருவம்
அப்பிவிட்ட
துடிப்புகளின் துயரம் பார்த்து...!
ஆட்டுக்காவலுக்கு ஓநாய் வந்ததுபோல
வெள்ளை வேட்டியில் வலம் வரும்
பெரிய்ய்ய...மனுசங்களைப் பார்த்து!
இமைமூடாத தூக்கம் போல...
 நான்
சாகாமல் செத்துப்
பிறக்காமல் பிறக்கிறேன்
கவிஞனுக்குரிய அடையாளத்துடன்...!

நன்றி:  சுந்தரசுகன்

No comments: