Tuesday, January 12, 2010

சவக்களை - பொ.முத்துவேல்

அந்தி வேளை
கோபுரக் கலசத்தில்
மின்சாரம்...
தும்பைப் பூவாய் பூத்திருந்தது!

அடங்காமல் திரியும்
சிற்ப அழகை
படச் சுருளால்
அதட்டி அமர்த்த
முயன்றுகொண்டிருந்தது
தம்பதியொன்று!

காதைப் பிளந்து போட்டபடி
பாடல்...
பீப்பிக்காரன்
விட்டு விட்டு
ஊதிக் கொண்டிருக்கிறான்...

கூத்து...கும்மாளம்...
மிரண்டு ஓடின
அடையவந்த குருவிகள்

வட்டமடித்தது பருந்து.

நன்றி: சுந்தரசுகன்

No comments: